தி.கவை குத்தகைக்கு எடுத்துவிட்டார் ஜெயா, திமுக சொல்கிறது
சென்னை:
திராவிடர் கழகத்திலிருந்து கொளத்தூர் மணியை நீக்கியதன் மூலம் ஜெயலலிதா மீதுதனக்கு இருந்த எஜமான விசுவாசத்தை வீரமணி நிரூபித்திருக்கிறார் என தி.மு.க.கூறியுள்ளது.
இது தொடர்பாக தி.மு.க.வின் விவசாய அணி செயலாளர் கே.பி.ராமலிங்கம்வெளியிட்டுள்ள அறிக்கயிைல் கூறியிருப்பதாவது:
ராஜ்குமார் விடுதலை செய்யப்படக் கூடாது என விரும்பியவர் ஜெயலலிதா.ராஜ்குமார் விடுதலைக்கு உதவும் விதமாக கொளத்தூர் மணி காட்டிற்கு சென்றார்என்று தெரிந்தவுடன் வீரமணி அவரை தி.க.விலிருந்து விலக்கி விட்டார்.
வீரமணி ஜெயலலிதாவிற்கு ராஜகுருவாக செயல்படுகிறார் என்பது அனைவரும்அறிந்த உண்மை. கொளத்தூர் மணியை தி.க.விலிருந்து நீக்கியதன் மூலம் ஜெயலலிதாமீது தனக்கு இருக்கும் எஜமான விசுவாசத்தை வீரமணி மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
திராவிடர் கழகத்தை ஜெயலலிதாவிற்கு குத்தகைக்கு விட்டுவிட்டார் வீரமணி எனகூறியிருக்கிறார்.