ஜோதிபாசுவுக்கு பாராட்டு விழா: ஜெ. பங்கேற்பு
சென்னை:
கல்கத்தாவில் முன்னாள் மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசுவுக்கு நடக்கும் பாராட்டுவிழாவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.
மேற்கு வங்கத்தில் 23 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர்ஜோதி பாசு. இவருக்கு வரும் 30-ம் தேதி கல்கத்தாவில் பாராட்டு விழா நடக்கிறது.இதில் முன்னாள் பிரதமர்கள் வி.பி. சிங், சந்திர சேகர், குஜ்ரால் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
இந்த விழாவில் பங்கேற்குமாறு ஜெயலலிதாவுக்கும் அழைப்பு அனுப்பப்ட்டடுள்ளது.இந்த அழைப்பை ஏற்று ஜெயலலிதா அந்த விழாவில் பங்கேற்க முடிவெடுத்துள்ளார்.
தற்போது ஜெயலலிதா ஹைதராபாத்தில ஓய்வெடுத்து வருகிறார். அவர் அங்கிருந்துகல்கத்தா சென்று ஜோதிபாசுவுக்கு நடைபெறும் பாராடடு விழாவில் கலந்துகொள்கிறார்.
பா.ஜ.வுக்கு எதிராக புதிய அணி அமைப்பது குறித்தும் அகில இந்தியதலைவர்களுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்துகிறார்.












Click it and Unblock the Notifications