ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை:
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ரயில் நிலையங்களில் போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வரும் டிசம்பர் 6 ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் ஆகும். இதை பல இஸ்லாமிய அமைப்புகள் கருப்புதினமாக ஆண்டுதோறும் அனுசரித்து வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் மாதம் 6 ம் தேதி ரயில் நிலையங்களில் குண்டு வெடித்தது. மேலும் பலஇடங்களில் அசம்பாவிதச் சம்பவங்கள் நடந்தன.
இதைத்தொடர்ந்து ரயில் நிலையங்களில் பாதுகாப்பைத் தீவிரப்படுத்த ஐ.ஜி. திலகவதி உத்தரவிட்டார். அதன்படி,அனைத்து ரயில் நிலையங்களிலும் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் ரகசிய வீடியோ காமிராக்களைப்பயன்படுத்தி போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படைபோலீஸார் துப்பாக்கி ஏந்தியபடி ரயில் நிலையத்தில் ரோந்து செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவை தவிர ரயில்வே பாதுகாப்பு படை சிறப்புப் பிரிவு போலீஸார் மோப்ப நாய்களுடன் வலம் வருகிறார்கள்.சந்தேகப்படும் நபர்களிடம் சோதனை செய்யப்படுகிறது.
பயணிகள் தவிர பிற யாரும் ரயில் நிலையங்களில் நுழைய முடியாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.