வாஜ்பாய் கொடும்பாவியை எரித்த சிவசேனா

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ரம்ஜானையொட்டி காஷ்மீரில் சண்டை நிறுத்தம் அறிவித்துள்ளதை பிரதமர் வாஜ்பாய் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று கூறி, சிவசேனைக்கட்சியினர் நாடாளுமன்றம் அருகே வாஜ்பாயின் கொடும்பாவியை எரித்தனர்.

கொடும்பாவி எரிப்புச் சம்பவம், தலைநகர் டெல்லியிலுள்ள நாடாளுமன்றம் அருகே வெள்ளிக்கிழமை பிற்பகல் நடந்தது.

சிவசேனைக் கட்சி டெல்லி பிரிவு தலைவர் ஜெய்பகவான் கோயல் தலைமையில் கட்சித் தொண்டர்கள் டெல்லியிலுள்ள ஜந்தார் மந்தார் பகுதியிலிருந்து,நாடாளுமன்ற வளாகம் நோக்கி, வாஜ்பாய்க்கு எதிராகவும், சிவசேனைக் கட்சித் தலைவர் பால்தாக்கரேவுக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பிக்கொண்டே வந்தனர். பின்னர் அவர்கள், நாடாளுமன்ற வளாகம் அருகே வாஜ்பாயின் கொடும்பாவியை எரித்தனர்.

ஆதரவு வாபஸ்:

முன்னதாக, கோயல் கூறுகையில், சிவசேனைக் கட்சித் தலைவர், பால்தாக்கரே பாரதிய ஜனதாக் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து, சிவசேனாவின் 15 எம்.பி.க்களின் ஆதரவை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும்.

ஏனெனில், கடந்த வருடம் லாகூருக்கு பஸ் போக்குவரத்து ஏற்படுத்தி, கார்கில் போருக்கு வழி வகுத்தார் வாஜ்பாய். அதேபோல் இந்த வருடம்ரம்ஜான் மாதத்தையொட்டி, காஷ்மீரில் சண்டை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதையொட்டி ஐந்து லாரி டிரைவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்என்றார்.

வெளிநடப்பு:

முன்னதாக, காஷ்மீரில் சண்டை நிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சிவசேனை எம்.பி.க்கள் போர்க்கொடிஉயர்த்தினர். வாஜ்பாய் இதை நிராகரித்து விட்டதால் அவர்கள் வெளிநடப்புச் செய்தனர் என்பது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+