4 பேர் படுகொலை: உ.பி.யில் தொடர்ந்து பதட்டம்
லக்னோ:
உத்தரப் பிரதேச மாநிலம் வாரனாசியை அடுத்துள்ள மாப்பூர் கிராமத்தில் 4 பேர் படு கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து அங்கு தொடர்ந்துபதட்டம் நிலவுகிறது. இருப்பினும், இங்கு வியாழக்கிழமை நடந்த உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக முடிந்தது.
இதுகுறித்து மாநில முதன்மை உள்துறை செயலாளர் ஹேமந்திரா குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
மாப்பூர் கிராமத்தில் ஏற்பட்ட கலவரத்தில் கடந்த நவம்பர் 9ம் தேதி முஸ்லீம் சிறுவர் சாஹிரூதின் என்பவர் தாக்கப்பட்டார். இதையடுத்து அப்பகுதியில்கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரம் பரவாமல் போலீஸார் தடுத்து நிறுத்தினர். மாப்பூர் மண்டல அதிகாரி கைலாஷ் நாத் சிங், அப்பகுதிக்குச் சென்றுநிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்.
கைலாஷ் நாத் சிங் திரும்பி வரும் வழியில் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவர் மேல் வெடிகுண்டு வீசியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயேஇறந்தார். மேலும், அந்தப் பகுதியில் காரில் வந்து கொண்டிருந்த 3 முஸ்லீம் இளைஞர்களை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று வெட்டிக் கொன்றது.அவர்கள் வந்த காரும் தீவைத்து எரிக்கப்பட்டது. இறந்த 3 பேரின் சடலங்களும் பக்கத்திலுள்ள ஆற்றில் வீசப்பட்டது. இதையடுத்து மாப்பூர்கிராமத்தில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டது.
தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய புறக்காவல் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம்தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிற குற்றவாளிகளைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர் என்றார்.
உத்தரப்பிரதேசத்தின் புதிய முதல்வராக ராஜ் நாத் சிங் பதவியேற்றுக் கொண்டபின் நடக்கும் 3 வது வகுப்புக் கலவரமாகும் இது.
அசாமகார் மாவட்டம் முபாரக்பூர் டவுனில் கடந்த நவம்பர் 5 ம் தேதி ஷியா, சன்னி முஸ்லீம் இனத்தவரிடையே கலவரம் ஏற்பட்டது. இதையடுத்துஅப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்னும் அது அமலில் உள்ளது. கடந்த வாரம் கான்பூரில் சிறுவன் கொலை செய்யப்பட்டான்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications