"வீரப்பனை உயிருடன் பிடிக்க வேண்டும்"

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் வீரப்பனை உயிருடன் பிடித்து விசாரிக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் சங்கரய்யா தெரிவித்தார்.

சென்னையில் வெள்ளிக் கிழமை அவர் அளித்த பேட்டி:

இந்தியாவில் இருப்பது போல் இலங்கையிலும் மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சிஅமைய வேண்டும் என்பது தான் எங்கள் கொள்கை. ஆனால், சில தீவிரவாதஅமைப்புகள் தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்று வீரப்பனை துணைக்குஅழைத்துள்ளன.

இதனால் தான் ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் நெடுமாறன் பேச்சு நடத்தசென்றுள்ளார். அந்த மலைப்பிரதேசம் ஆபத்து நிறைந்த பகுதியாக இப்போது மாறிவருகிறது. வன சொத்துக்களை பாதுகாப்பதோடு வீரப்பனை உயிரோடு பிடித்துசட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதிரடிப்படை நடவடிக்கையின் போது அப்பகுதி மக்களுக்கு தொல்லை ஏதும்ஏற்பட்டு விடக் கூடாது. கண்மூடித்தனமான தேடுதல் வேட்டை நல்லதல்ல.

வீரப்பன் விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படாததால் பல சந்தேகங்கள்எழுகின்றன. இவற்றிற்கு விடை கிடைக்க தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்றார் சங்கரய்யா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+