மகளை கொன்ற சீக்கியத் தலைவியிடம் சிபிஐ 3 மணி நேரம் விசாரணை
டெல்லி:
காதல் திருமணம் செய்ததற்காக மகளைக் கொன்ற தாயும், பஞ்சாப் மாநில சிரோமணி குருத்துவாரா பிரபந்தக் கமிட்டியின் தலைவியுமான ஜகீர் கவுரிடம்வெள்ளிக்கிழமை சிபிஐ 3 மணி நேரம் தொடர் விசாரணை நடத்தியது.
விசாரணை குறித்து ஜகீர் கவுர் கூறுகையில், சிபிஐயினர் என்னிடம் என்ன வேண்டுமானாலும் கேட்கட்டும். நான் எதற்கும் பதில் கூறத் தயாராகஇருக்கிறேன். எதிர்காலத்திலும் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் இந்தக் கொலைச் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பலாம். நான் பதிலளிக்கத்தயாராக இருக்கிறேன் என்றார்.
ஏற்கனவே, இவரை கடந்த நவம்பர் 17 ம் தேதி, சிபிஐ புலனாய்வுப் பிரிவினர் இந்தக் கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
முன்னதாக, 19 வயதான இவரது மகள் ஹர்பிரீத், கமல்ஜித் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இதற்கு ஜகீர் கடும் எதிர்ப்புத்தெரிவித்தார்.
தாயின் கடும் எதிர்ப்பையும் மீறி ஹர்பிரீத், தான் காதலித்த வாலிபர் கமல்ஜித்தையே திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து ஹர்பிரீத் கர்ப்பமாக இருந்தபோது, அவரது தாய் ஜகீர் அவர் வீட்டுக்குச் சென்றார். அடுத்த நாள் (ஏப்ரல் 20 ம் தேதி) ஹர்பிரீத் விஷ மாத்திரைகள் சாப்பிட்ட நிலையில் இறந்துகிடந்தார்.
அவரை யார்? எதற்காக? கொலை செய்தனர் என்பது மர்மமாக இருந்தது. மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜகீரே அடியாட்கள் வைத்து தன்மகளைக் கொலை செய்திருக்கலாம் என்று சி.பி.ஐ. கருதுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் ஜகீர் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications