தமிழக கலாச்சாரம் குறித்து வார விழா
சென்னை:
தமிழக கலாச்சாரம் குறிதத வார விழா தமிழகத்தில் நடக்கவிருக்கிறது.
மாணவர்களிடையேயும், பொது மக்களிடையேயும் நமது கலாச்சாரத்தின் பெருமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,கலாச்சாரத்தைப் பாதுகாப்பது பற்றி பிரச்சாரமும் மேற்கொள்ளப்படும்.
யுனெஸகோவின் உலக மரபுக் கழகத்தின் பரிந்துரையின் படி இந்திய தொல்பொருள் ஆய்வகம் இந்த விழாவை நடத்துகிறது.நவம்பர் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை தமிழகத்தில் இந்த விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவின் போது மாணவர்களுக்கு இந்திய கலாச்சாரம் குறித்த விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காக வானொலிநிகழ்சிகளும், புகைப்படக் கண்காட்சிகளும் நடத்தப்பட உள்ளன.
உலக அளவில் கலாச்சார பெருமையை விளக்கும் நினைவுச் சின்னங்களாக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட இடங்களில் 630இடங்கள் தமிழகத்தில் உள்ளன. இவை அனைத்தும் இந்திய தொல் பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.இவை மாமல்லபுரத்திலும், தஞ்சாவூரிலும் அமைந்துள்ளன.
இது குறித்து சென்னை தொல் பொருள் ஆராய்சிக்கழக முதன்மை கண்காணிப்பாளர் நரசிம்மன் தெரிவிக்கையில், எங்கள் பணிகலாச்சார நினைவுச் சின்னங்களை பராமரிப்பதுதான். பல இடங்களில் நாங்கள் தேவையான வசதிகள் செய்யவில்லை எனபுகார்கள் கூறப்படுகின்றன. பெரும்பாலன இடங்களில் குடிநீர் வசதி, பூங்காக்களை எல்லாம் தொல் பொருள் ஆராய்சிக் கழகம்தான் பராமரித்து வருகிறது.
ஒவ்வொரு நினைவுச் சின்னத்தையும் பராமரிக்க ரூ 20,000 தேவைப்படுகிறது. ஆனால் எங்களுக்கு அதற்காக கொடுக்கப்படுவதுமிகக்குறைவான அளவு பணம்தான்.
தமிழக்கதில் மக்களுக்கு அடிக்கடி சிலைகள், வெண்கல பாத்திரங்கள் நிலங்களில் தோண்டும்போது கிடைக்கின்றன. ஆனால்அவர்கள் இது பற்றி அரசுக்கு தெரிவிப்பதில்லை, சென்னையில் இருக்கும் 4 தொல் பொருள் ஆராய்சி நிறுவனங்கள் கிராமம்கிராமமாக சென்று மக்களிடம் அவர்களுக்கு கிடைத்த பொருள்கள் பற்றியும் தொல் பொருள்ஆராய்சி கழகத்தின் செயல்பாடுகள்பற்றியும் விளக்கி வருகிறார்கள் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications