வீரப்பனைப் பிடிக்க புதிய திட்டம்
சென்னை:
சந்தன மரக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க, தமிழக, கர்நாடக கூட்டு அதிரடிப்படை வீரர்கள் புதிய திட்டம் தீட்டியுள்ளதாகதெரிகிறது.
வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமார், 108 நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். தற்போது அதிரடிப்படைவீரப்பனை பிடிக்கும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இரு மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் டெல்லியில் மத்திய உள்துறைஅமைச்சர் அத்வானியையும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து தமிழக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த கர்நாடக உள்துறைச் செயலாளர் பிரகாஷ், டி.ஜி.பி. தினகர்ஆகியோர் சனிக்கிழமை சென்னை வந்தனர். சென்னையில் உள்துறைச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர், டி.ஜி.பி. ராஜகோபாலன்,கூடுதல் டி.ஜி.பி. அலெக்சாண்டர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனை காலை 11 மணிக்கு துவங்கி நண்பகல் 12.45 மணி வரை நடந்தது. கூட்டத்திற்கு பிறகு கர்நாடக டி.ஜி.பி.தினகரும், டி.ஜி.பி. ராஜகோபாலனும் கூட்டாக அளித்த பேட்டியில் கூறுகையில், வீரப்பனை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும்நாங்கள் பழைய அணுகுமுறையை மாற்றிக் கொள்ள இருக்கிறோம். புதிய அணுகுமுறை குறித்து திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
அதிரடிப் படை செயல்பாடுகள் துவங்கிவிட்டன. மத்திய அரசிடமிருந்து அதி நவீன ஆயுதங்கள், படை உதவி உள்ளிட்டஅனைத்து உதவிகளும் கேட்டிருக்கிறோம்.
இரு மாநில அதிரடிப்படையுடன் ஒற்றுமையுடன் செயல் பட்டு வருகின்றன. ஐ.ஜி. பாலச்சந்திரன் தலைமையில் அதிரடிப்படைசெயல்படும். கர்நாடக டி.ஐ.ஜி. ஹர்ஷவர்த்தன ராஜூ அவருக்கு உதவியாக இருப்பார்.
மத்திய அரசிடமிருந்து உதவிகள் பெறுவதற்கும், புலனாய்வுத் துறைக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. கர்நாடககாட்டிற்குள் வீரப்பன் நுழைந்து விட்டதாக கூறப்படுவது குறித்து கருத்து தெரிவிக்க நாங்கள் விரும்பவில்லை.
மனித முயற்சியில் வீரப்பனை பிடிக்க எந்த காலக் கெடுவும் நிர்ணயித்து கூற முடியாது. வீரப்பனை பிடிக்கும் வரையும், காலக்கெடு என வைத்துக் கொள்ள வேண்டும். கிராம மக்கள் உதவியோடுதான் எங்கள் செயல்பாடு அமையும்.
நாங்கள் விவாதித்த அனைத்து விவரங்களையும் உங்களிடம் கூற முடியாது. மத்திய அரசிடம் என்ன கேட்டிருக்கிறோம் என்றமுழு விவரத்தைக் கூட நாங்கள் வெளியிட முடியாது என கூறினர்.
இந்நிலையில், தமிழக, கர்நாடக அரசுகள் கேட்டுக் கொண்டதன் படி விரைவில் கமாண்டோ படையை வீரப்பனை பிடிக்கஅனுப்பி வைப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வீரப்பனை பிடிக்க ராணுவத்தை அனுப்புமாறூ மத்திய அரசை தமிழக, கர்நாடக அரசுகள் மத்திய அரசுகள் கேட்டிருந்தன. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு பெரும்பாலும் ராணுவம் அனுபப்படுவதில்லை. அதனால் கமாண்டோ படையை அனுப்ப மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.
அதி நவீன கருவிகள், ஆயுதங்களும் கிடைக்க இருப்பதால் காட்டுக்குள் உள்ள அனைத்து வழிகளிலும் அதிரடிப் படையினரும்,மத்திய படைகளும் ஒரே சமயத்தில் வீரப்பனை தேடும் பணியில் ஈடுபடும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்!












Click it and Unblock the Notifications