வீரப்பனைப் பிடிப்பதில் தவறில்லை .. ராமதாஸ்
வேலூர்:
வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படையை அனுப்பியது தவறில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ்கூறினார்.
வேலூரில், மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மகளிர் பிரிவு மாநாடு நடந்தது. மாநாட்டில், ராமதாஸ் பேசுகையில்,பாட்டாளி மக்கள் கட்சியில்தான், பிற கட்சிகளை விட பெண்களுக்கு அதிக மரியாதை தரப்படுகிறது.
4 ஆண்டுகளுக்கு முன்பே, பெண்களுக்கு எங்கள் கட்சியில் இடஒதுக்கீடு வழங்கினோம். பெண்களை இழிவுபடுத்தும் வகையில்இனிமேல் யாரும் பேசாதீர்கள். எம்.எல்.ஏ, எம்.பி. ஆகிய பதவிகளுக்கு பெண்கள் வரக் கூடாது என்று பேசுகிறார்கள். இதனால்,அவர்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான சட்ட மசோதா இன்னும் நிறைவேறாமல் உள்ளது.
வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படையை அனுப்பியதில் தவறில்லை. முன்பே வீரப்பனுக்கு முன்பே பொது மன்னிப்புவழங்கியிருக்கலாம். அதைச் செய்திருந்தால் இப்போதைய பிரச்சினையே வந்திருக்காது.
ராஜ்குமாரை மீட்க ஏற்பட்ட தாமதத்திற்கு கோபாலே, காரணம். வேறு யாராவது முன்பே போயிருந்தால் வேகமாக மீட்டுவந்திருக்கலாம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications