அஸ்ஸாமில் 8 பேர் படுகொலை
குவஹாத்தி:
அஸ்ஸாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டத்தில் மரம் வெட்டிக் கொண்டிருந்த கிராமத்துமக்கள் மீது பழங்குடி போடோ தீவிரவாதிகள் நடத்திய வெறித்தாக்குதலில் 8 பேர்கொல்லப்பட்டனர்.
தலைநகர் குவஹாத்தியிலிருந்து 280 கிலோமீட்டர் தொலைவில் இந்த மாவட்டம்உள்ளது. படுகொலைச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கையில், தேசியஜனநாயக போடோலேண்ட் முன்னணி என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்இந்த சம்பவத்தில் தொடர்பு கொண்டுள்ளனர்.
கோக்ரஜார் மாவட்டம், கோலிஜரா வனப் பகுதியில் 12 பேர் மரம் வெட்டிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள், பயங்கர ஆயுதங்களால்அவர்களை சரமாரியாகத் தாக்கினர். இதில், 8 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.பிறர் காயமுற்றனர்.
3 பேரின் தலைகள் துண்டிக்கப்பட்டன. சில உடல்களில் துப்பாக்கிக் குண்டுகள்பாய்ந்திருந்தன. எனவே தீவிரவாதிகள் வசம் துப்பாக்கிகளும் இருந்திருக்கலாம் என்றுசந்தேகிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 1 மாதத்தில், அஸ்ஸாமில் தீவிரவாதிகளால் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.கடந்த 10 ஆண்டுகளில் 10,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications