தனி மாநிலம் கேட்கிறார்கள் கொங்கு வேளாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, நாமக்கல், தர்மபுரி, கரூர், திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைப் பிரித்து கொங்கு மாநிலம்என்று அறிவிக்க வேண்டும் என்று கொங்கு வேளாள கவுண்டர்கள் முன்னேற்றப் பேரவை மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழக கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவையின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதீர்மானங்கள் குறித்த விவரம் வருமாறு:

கொங்கு வேளாளர் பேரவையின் மாநில மாநாடு, தர்மபுரியில் வரும் 2001 ம் ஆண்டு பிப்ரவரி 11 ம் தேதி நடக்கவுள்ளது.

உத்தரப்பிரதேசம், பிகார், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களைப் பிரித்தது போல் தமிழகத்தையும் பிரிக்க வேண்டும். தமிழகத்திலுள்ள கோவை, நீலகிரி,சேலம், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, கரூர், ஈரோடு, தர்மபுரி ஆகிய மாவட்டங்களைப் பிரித்து கொங்கு மாநிலம் என்ற புதிய மாநிலம் உருவாகவேண்டும்.

தமிழகத்தில் தென்னை மரங்களை சிலந்திப் பூச்சி தாக்கி வருகிறது. இதனால் தேங்காய் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்குநஷ்டஈடு கொடுக்க வேண்டும்.

ஜாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுத்து, அதன் அடிப்படையில் அனைத்துத் துறைகளிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

கொங்கு வேளாளர் இனத்தில் உள்ள 15 உள் பிரிவுகளை அரசு அங்கீகரித்துள்ளது. இதுதவிர மேலும் 15 உள் பிரிவுகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+