தொடரும் வன்முறையில் கண்ணீர் வடிக்கிறது காஷ்மீர்
ஸ்ரீநகர்:
ரம்ஜானை முன்னிட்டு அரசு அறிவித்த ஒருமாத போர்நிறுத்தம் தீவிரவாதிகளை மிகப் பெரிய வன்முறையில் ஈடுபடவைத்திருக்கிறது.
போர் நிறுத்தம் தொடங்கிய முதவல் 12 மணி நேரம் அமைதியாக இருந்தது. ஆனால் அந்த அமைதி, பின் தொடரும்வன்முறைக்கு கட்டியம் கூறும் அமைதியாக அமைந்தது வேதனைக்குரியது.
ரம்ஜான் தொடங்கியதால் அரசு ராணுவ வீரர்களை போரில் ஈடுபட வேண்டாம் என கூறியிருந்தது. ஆனால் தீவிரவாதிகள்வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர. திங்கள் கிழமை மாலை முதல் முதல் நடைபெற்று வன்முறையில் 8 தீவிர வாதிகழ் 3ராணுவ வீரர்கள் உட்பட 14 பேர் கொல்லபட்டுள்ளனர்.
தீவிரவாதிகள் பாதுகாப்புப்பணில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினரை தாக்கினர். ஆளும் நேஷனல் கான்பிரன்ஸ் கட்சித்தலைவரின்வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தினர். சிலர் முன்னாள் அமைச்சர் வீட்டை தீயிட்டு கொளுத்தினர்.
ஸ்ரீநகருக்கு 75 கிலோமீடட்ர் தொலைவில் அமைந்துள்ள தோரு என்ற இடத்துக்கு அருகே உள்ள கிரீரி - நோவ்போரா ரோட்டில்ராஷ்டிரிய. ரைபிளலஸ்சின் ராணுவ வண்டி ஒன்று தீவரவாதிகளின் கண்டி வெடியால் தகர்கக்பப்ட்டது.
இந்த தாக்குதலில் 3 ராஷ்டிரிய ரைபிள்சின் வீரர்கள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர்காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படடுள்ளனர்.
பைசலாபாத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப்படையினருக்கும் இடையே திங்கள் கிழமை மாலை ஏற்பட்ட மோதலில்இரண்டு தீவிரவாதிகளும், நசீமா அக்தர் என்ற பெண்ணும் கொல்லப்பட்டனர், இரண்டு ஏகே துப்பாக்கிகளும், 9பத்திரிக்கைகளும், ஒரு துப்பாக்கியும், இரண்டு வயர்லெஸ் கருவிகளும் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றபட்டன.
ஆளும் நேஷனல் கான்பிரன்சின் கட்சித் தலைவர்களில் ஒருவராந குலாம் மபி மிர் என்பவரின் வீடு தீவிரவாதிகளால்தாக்கப்பட்டது. ஆனால் இதில் எவரும் காயமடைவில்லை.யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications