For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை லண்டனில் உலக அழகிப் போட்டி: வெல்வாரா பிரியங்கா

By Staff
Google Oneindia Tamil News

லண்டன்:

Priyanka Chopraலண்டனில் 2000 மாவது ஆண்டிற்கான உலக அழகிப் போட்டி வியாழக்கிழமை நடக்கிறது.

இப்போட்டியில் உலகம் முழுவதிலுமிருந்து 95 அழகிகள் கலந்து கொள்கின்றனர். இந்தியாவின் சார்பில் பிரியங்கா சோப்ரா கலந்து கொள்கிறார்.

அழகிப் போட்டியை உலகம் முழுவதும் 200 கோடி மக்கள் கண்டு களிக்கவுள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் அனைத்து நாடுகளிலிருந்து சிறந்த அழகிகளை தேர்ந்தெடுப்பதற்காக மிஸ் வேர்ல்டு மற்றும் மிஸ் யூனிவர்ஸ் ஆகிய போட்டிகள்நடத்தப்படுகின்றன.

இதில் இறுதிச் சுற்றில் வெற்றி பெறும் அழகிகள் மிஸ் யூனிவர்ஸ் அல்லது மிஸ் வேர்ல்டு பட்டத்தைப் பெறுவர்.

Priyanka Chopraமிஸ் வேர்ல்டு:

இந்த ஆண்டு மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டி லண்டனில் உள்ள மில்லினியம் அரங்கில் வியாழக்கிழமை நடக்கிறது. அழகிப் போட்டிகள் தொடங்கி 50ஆண்டுகள் நிறைவடைவதை யொட்டி இந்த ஆண்டு மிகச் சிறப்பாக அழகிப் போட்டியைக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது.

பரவசத்தில் ரசிகர்கள்:

அழகிப் போட்டி இந்திய ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த ஆண்டிற்கான மிஸ் வேர்ல்டு போட்டியில் பிரியங்காசோப்ரா, இந்தியா சார்பில் பங்கேற்கிறார்.

அவர் வென்று விட்டால், ஒரே ஆண்டில் மிஸ் வேர்ல்டு மற்றும் மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தைப் பெற்றவர்கள் பட்டியலில் இரண்டாது முறையாக இந்தியர்கள்இடம் பெறுவர்.

இந்த ஆண்டிற்கான மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை இந்திய அழகி லாரா தத்தா ஏற்கனவே வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, 94 ம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை சுஷ்மிதா சென்னும், மிஸ் வேர்ல்டு பட்டத்தை ஐஸ்வர்யா ராயும் பெற்றுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X