மர்மமான முறையில் 23 குதிரைகள் சாவு
சென்னை:
சென்னை ராணுவ முகாமில் உள்ள 23 குதிரைகள் மர்மமான முறையில் இறந்து போயின. இது குறித்து உயர் மட்ட குழுவினர் விசாரணை நடத்திவருகிறார்கள்.
சென்னையில் உள்ள ராணுவ முகாமிலும், தேசிய மாணவர் படையிலும் கிங் பயிற்சி மையத்திலும் பல குதிரைகள் உள்ளன. குதிரை சவாரி பயிற்சிக்கு இந்தகுதிரைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த மூன்று நாட்களாக பெரும்பாலான குதிரைகள் திடீர் சுகவீனம் அடைந்தன. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்த குதிரைகள் திடீர் சுகவீனம்அடைந்தது பெரும் அதிர்ச்சியை அளித்தது.
இந்த நிலையில் ஒவ்வொரு குதிரையாக இறந்தன. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 23 குதிரைகள் இறந்துள்ளன.
இதைத் தொடர்ந்து இதர குதிரைகளுக்கு கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் பரிசோதனை அளிக்கப்பட்டு வருகிறது.
23 குதிரைகளும் எப்படி இறந்தது என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே இது குறித்து விசாரணை நடத்த உயர்மட்டக்குழு ஒன்றுஅமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் குதிரைகள் மர்ம சாவு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மர்மமான முறையில் இறந்த குதிரைகள் பிரேத பரிசோதனைசெய்யப்பட்டன.
சில உடல் உறுப்புகள் எடுத்து சோதனைக்கும் உட் படுத்தப்பட்டுள்ளது.பரிசோதனைக் கூடத்தில் இருந்து வரும் அறிக்கையை வைத்தே காரணத்தை கண்டுபிடிக்க முடியும்.
குதிரைகளுக்கு வழங்கப்பட்ட புல்லில் ஏதாவது கலந்திருக்குமோ என்று கால்நடை அதிகாரிகள் கருதுகிறார்கள். எனவே புல் சப்ளை செய்தவரிடம்விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கால்நடைப் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவக்கல்லூரி, கால்நடை பராமறிப்புத் துறை ஆகியவை குதிரைகள் மர்ம சாவு குறித்து தீவிர விசாரணைமேற் கொண்டு வருகிறன்றன.