இஸ்ரேல் யோசனைக்கு பாலஸ்தீனம் எதிர்ப்பு
காஸா:
பாலஸ்தீனப் பிரச்சனையில் படிப்படியாக இறுதி உடன்பாடு காண வேண்டும் என்ற இஸ்ரேல் யோசனையைபாலஸ்தீனம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.
பாலஸ்தீனர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண இடைக்கால உடன்பாடுகளைஏற்படுத்தலாம் என்று இஸ்ரேல் பிரதமர் எகுத் பராக் யோசனை தெரிவித்திருந்தார்.
இந்த யோசனை வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. இந்நிலையில் பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத்தின்நெருங்கிய உதவியாளரான நபில் அபு கூறுகையில், இடைக்கால ஒப்பந்தம் நடத்துவதில் பாலஸ்தீனத்திற்குசிறிதளவும் விருப்பமில்லை.
5 ஆண்டுகளுக்கு பாலஸ்தீனத்துக்கு தன்னாட்சி அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும். இதன் மூலம் தான் அமைதிஒப்பந்தத்துக்கு வழி பிறக்கும்.
கிழக்கு ஜெருசலேத்தை மையமாகக் கொண்டு தனி பாலஸ்தீனத்தை உருவாக்குவது உள்ளிட்ட பலபிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதே இறுதி உடன்படிக்கையின் நோக்கம். ஆனால் இது தொடர்பானபேச்சுவார்த்தையில் எந்த வித பலனும் கிடைக்கவில்லை என்றார்.