புதுவை அமைச்சருக்கு புலிகளுடன் தொடர்பு
பாண்டிச்சேரி:
புதுவையில் உள்ள ஒரு அமைச்சருக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளது என்று அமைச்சர் கண்ணன் செவ்வாய்க்கிழமை பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அமைச்சர் கண்ணன், பாண்டிச்சேரியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், புதுவையில் இப்பொழுது விடுதலைப் புலிகள் பற்றி பேச்சு வந்துள்ளது.
புதுவையில் அமைச்சராக உள்ள ஒருவருக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளது. அவர் முன்பு பகிரங்கமாக விடுதலைப் புலிகளுடன் தொடர்புவைத்திருந்தார்.
அவர் வீட்டில் பிரபாகரன் படம் மாட்டப்பட்டிருந்தது. இப்பொழுது அது ரகசியமாக மறைக்கப்பட்டுள்ளது. அவர் இன்னும் விடுதலைப் புலிகளுடன்தொடர்பு வைத்துள்ளார்.
சமயம் வரும் பொழுது அது பற்றிய பல உண்மைகளை நான் சொல்வேன். காங்கிரஸ் கட்சி இது சம்பந்தமாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?காங்கிரஸ் கட்சித் தலைவர் தானே விடுதலைப் புலிகளை பற்றி பேசி வருகிறார். அந்த கட்சி இந்த விஷயத்தில் என்ன முடிவு எடுக்கப் போகிறது?
புலிகளுக்கு புதுவை நகரத்தில் உள்ள அவரது இடத்தை கொடுத்திருக்கிறார். அந்த அமைச்சர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த அமைச்சர் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்துள்ளார் என்பதை ஆதாரத்துடன் தேவைப்படும் பொழுது நான் சொல்வேன் என்றார் கண்ணன்.