திருவண்ணாமையில் கார்த்திகை தீபம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் கார்த்திகை தீப விழா நாளை ( 30ம் தேதி) கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.
திருவண்ணாமலையில் உள்ள புகழ் மிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அடுத்தமாதம் ( டிசம்பர் ) 9-ம் தேதி கார்த்திகை தீபவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தீப விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக கொடி ஏற்றம் நாளை காலை 7.30 மணிக்கு மேல்9.00 மணிக்குள் நடக்கிறது.
அதைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கின்றன. வரும் 5-ம் தேதி வெள்ளி ரத ஓட்டம் நடைபெறும். மறுநாள்காலை 5.30 மணிக்கு மேல் 7.00 மணிக்குள் தேரோட்டம் தொடங்கி தொடர்ந்து நடைபெறும்.
இதனையடுத்து, 9-ம் தேதி காலை 4.00 மணிக்கு பரணி தீபம் அன்று மாலை 6.00 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும். மிகவும்சிறப்பு வாய்ந்த தீப விழாவை காண மட்டும் தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்கிளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள்கூடுவார்கள்.
இதற்காக திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சிறப்பான நடவடிக்கை எடுத்தும் வருகின்றது. தீபத்திற்கு பிறகு,அய்யங்குளத்தில் 3 நாட்கள் தெப்பத் திருவிழாவும் நடைபெறும்.












Click it and Unblock the Notifications