இந்தியா-ஜிம்பாம்பே டெஸ்ட் டிராவில் முடிந்தது
நாக்பூர்:
நாக்பூரில் இந்திய - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது இறுதி டெஸ்ட் போட்டி இரு தரப்பினருக்கும் வெற்றி தோல்வியின்றிடிராவில் முடிவடைந்தது.
செவ்வாய் கிழமை நடந்த நான்காவது நாள் ஆட்டத்தில் ஜிம்பாப்வே ஃபாலோ ஆன் பெற்றது.
புதன்கிழமை ஐந்தாவது இறுதி நாள் ஆட்டத்தின் துவக்கத்தில் நான்காவது நாள் ஆட்டமிழக்காமல் இருந்த காம்ப்பெல்லும், ஆன்டி ஃப்ளாவரும்தொடர்ந்து ஆடத் துவங்கினர். காம்ப்பெல் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆன்டி ஃப்ளாவர் 232 ரன்கள் எடுத்து புதன்கிழமை ஆட்ட நேர முடிவு வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.ஜிம்பாப்வே அணி 503 ரன்கள் எடுத்து 6விக்கெட்டுகளை எடுத்திருந்த போது இரு அணித் தலைவர்களும் ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என முடிவு செய்தனர்.அதைத் தொடர்ந்து ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.
ஆட்டம் இரு தரப்பினருக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது.
ஆன்டி ஃப்ளாவர் இந்த டெஸ்ட் போட்டியின் சிறந்த ஆட்டக்காரராகவும், இரண்டு டெஸ்ட் கொண்ட டெஸ்ட் தொடரின் சிறந்த ஆட்டக்காராகவும்தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியத் தரப்பில் சாகிர் கான் 48 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். எஸ்.சிங் 134 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.சுனில் ஜோஷி 153 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார்.
முதல் டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் இரண்டு டெஸ்டுகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.












Click it and Unblock the Notifications