இன்று கடலைக் கடக்கிறது புயல்: சென்னையில் மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் செவ்வாய்கிழமை கரையைக் கடக்கிறது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில்மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது.
தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் ஞாயிற்று கிழமை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியிருந்தது. இது திங்கள் கிழமை பிற்பகலில்புயலாகி உருவெடுத்தது. இந்த புயல் செவ்வாய்கிழமை பிற்பகல் கரையைக் கடக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆராயச்சி மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புயல் தமிழகத்திற்கு தென் கிழக்கே 850 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் மேலும் வலுவடைந்து வடமேற்கு பகுதியில்நகரும்.
இதன் காரணமாக வட தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளிலும், பாண்டிச்சேரியிலும் செவ்வாய்கிழமை மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications