For Daily Alerts
Just In
சபரிமலை பாயாசத்தில் எலி வால், பீடிகள்
திருவனந்தபுரம்:
சபரி மலைக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவண பாயாசத்தில் எலி வாலும், பீடிகளும் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இங்கு வரும் பக்தர்களுக்கு அரவணப் பாயாசம் வழங்கப்படுவது வழக்கம். இந்தப் பாயாசத்தில் எலி வால் மற்றும் பீடிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது மிகப் பெரிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. பக்தர்களுக்கு வழங்கிய பாயாசம் தொடுபுழாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பும் இதே போல் பக்தர்களுக்கு வழங்கப்படும் பாயாசத்தில் எலி வால் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
ஐ.ஏ.என்.எஸ்.
Comments
Story first published: Wednesday, November 29, 2000, 5:30 [IST]