அதிரடிப்படையில் இடம்பெற கோவை போலீஸார் விருப்பம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
வீரப்பனைத் தேடிப் பிடிக்கவும் அதிரடிப்படையில் இடம் பெறவும் ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் 18 போலீசார் முன் வந்துள்ளனர்.
ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்ட பிறகு வீரப்பனைத் தேடிப் பிடிக்க புதிய இளைஞர்கள் கொண்ட படையை உருவாக்க அனைத்துக் காவல் நிலையங்களுக்கும்சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
இந்த சுற்றறிக்கையில் நல்ல உடல் கட்டுடன் உள்ள இளைஞர்கள் படையில் சேர விருப்பம் தெரிவிக்கலாம் என கூறப்பட்டது.
இதனையடுத்து கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றி வரும் 18 படை வீரர்கள் விருப்பம் தெரிவித்து போலீஸ்தலைமையகத்திற்குக் கடிதங்கள் எழுதியுள்ளனர்.
இவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிக்காக அதிரடிப்படை முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அங்கு இவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications