வீரப்பனால் தப்பித்துச் செல்ல முடியாது: அதிரடிப்படை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சந்தன மரக்கடத்தல் வீரப்பன் சந்தியமங்கலம் காட்டுப்பகுதியை விட்டு தப்பியிருக்க முடியாது என அதிரடிப் படையினர் நம்பிக்கைதெரிவித்துள்ளனர்.

வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமார் 108 நாட்களுக்குப்பின் விடுதலை செய்யப்பட்டார். அதன் பின் வீரப்பனை பிடிக்கதமிழக, கர்நாடக அரசுகளின் அதிரடிப் படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் வீரப்பன் கேரளா வழியாக இலங்கைக்கு தப்பி சென்று விட்டதாக வதந்திகள் நிலவி வந்தன. இது குறித்து வீரப்பனால்கடத்திச் செல்லப்பட்ட காவல் துறை குழுவில் இருந்த ஒருவரை கேட்ட போது அவர் கூறியதாவது:

வீரப்பன் தப்பிச் செல்ல வாய்ப்புகள் கிடையாது ஏனென்றால் சத்தியமங்கலம் காடு மட்டும் தான் அடர்ந்த காடு. இங்குதான் காடுஅடர்த்தியாக இருப்பதால் மனிதர்கள் நடமாட்டம் தெரியாமல் மறைந்து வாழ முடியும்.

கர்நாடக, கேரள காடுகளில் சில இடங்கள் பரந்த நிலப்பரப்பாக இருக்கும். மேலும் சிலர் அங்கு குடிசைகள் அமைத்து வாழ்ந்தும்வருகிறார்கள். இதனால் வீரப்பன் அந்த வழியாக தப்பிச் சென்றிருக்க முடியாது.

வீரப்பனுக்கு உணவு கொண்டு செல்லும் பாதை தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. காட்டில் கிழங்குகள், பழங்கள் போன்றவைகிடைக்கும். அதனால் உணவுப் பொருள்கள் இல்லை என்பதால் பாதிப்பு ஏற்படாது.

வீரப்பனை பிடிப்பது குறித்து எடுக்கும் நடவடிக்கை ரகசியமாக வைக்கப்பட வேண்டும். ரேடியோ செய்திகள் கேட்கும் வழக்கம்உள்ள வீரப்பன் அதிரடிப்படை நடவடிக்கை குறித்து தெரிந்து கொண்டால் தன் மறைவிடத்தை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

வீரப்பனை பிடிக்க முடியாது என்பதில்லை. தீவிர முயற்சி இருந்தால் வீரப்பனை பிடிக்க முடியும் என கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+