பாக். வீரர் அக்ரமுக்கு நினைவுப்பரிசு
பைசலாபாத்:
100 வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமுக்கு நினைவுப் பரிசு அளிக்கப்பட்டது.
பைசலாபாத்தில் புதன்கிழமை துவங்கிய இங்கிலாந்து, பாகிஸ்தானுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அக்ரம் கெளரவிக்கப்பட்டார்.
பாகிஸ்தான் வீரர்கள் சார்பில், பயிற்சியாளர் ஜாவித் மியான் தாத் 22 கேரட் தங்கத்திலான நினைவுப் பரிசை அக்ரமுக்கு வழங்கினார்.
100 டெஸ்ட் போட்டிகளில் 400 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது சாதாரணமான விஷயமல்ல என்றார் மியான்தாத். 100 டெஸ்ட்போட்டிகளில் விளையாடிய 3 வது பாகிஸ்தான் வீரராகத் திகழ்கிறார் அக்ரம்.
இதற்கு முன்பு ஜாவித் மியான் தாத், சலீம் மாலிக் ஆகியோர் 100 க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளனர். மேலும் உலக அளவில் 100டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 24 வது வீரராகவும் திகழ்கிறார் அக்ரம்.












Click it and Unblock the Notifications