For Daily Alerts
Just In
தமிழகத்தில் கடும் மழை தொடர்கிறது
சென்னை:
புயல் கரையை கடந்த போதிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் வடக்குப் பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலைஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி வானிலை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த புயல் கடலூர் அருகே புதன்கிழமை மாலை 5.30 மணிக்குக் கரையைக் கடந்தது.
புயல் மேற்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக வலு இழந்து விடும். இருப்பினும் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், தஞ்சை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில்அடுத்த 48 மணி நேரங்களுக்கு மழை பெய்யக் கூடும் என்று தெரிகிறது.
புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், விழுப்புரம் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும். தமிழ்நாடு முழுவதும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். பெரிய, பெரியஅலைகள் வரும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Story first published: Thursday, November 30, 2000, 5:30 [IST]