கம்ப்யூட்டர் வளர்ச்சிக்குக் கூடுதல் நிதி
மதுரை:
தமிழகத்தில் கம்யூட்டர் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று சபாநாயகர்பழனிவேல்ராஜன் புதன்கிழமை தெரிவித்தார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்து கொண்டசபாநாயகர் பழனிவேல்ராஜன் கூறியதாவது:
சமுதாய சீர்திருத்தத்திற்காக தற்போது தமிழக அரசு கல்வி துறையை அரவணைத்து அதற்காக அதிக அளவுநிதியையும் ஒதுக்கி வருகிறது.
முன்பெல்லாம் கணிதம் ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கே சொந்தமானதாக இருந்தது. கணிதம் தெரிந்தால்தான்கம்யூட்டர் படிக்க முடியும் என்ற காலமெல்லாம் மலையேறி விட்டது.
தமிழகத்தில் கலைஞர் ஆட்சியில் கம்ப்யூட்டர் புரட்சி ஏற்பட்டுள்ளது. பல வெளிநாட்டு கம்ப்யூட்டர்நிறுவனங்களும், தமிழகத்தோடு தொடர்பு வைத்துள்ளது.
கம்ப்யூட்டர் புரட்சியை ஏற்படுத்துவதற்கு கடந்த 1999 ம் வருடம் தமிழக அரசு ரூ 20 கோடியை ஒதுக்கியது.வருகிற கல்வி ஆண்டில் ரூ 160 கோடியை ஒதுக்கும் என்றார் பழனிவேல்ராஜன்.












Click it and Unblock the Notifications