நெல்லையில் முட்டைகள் மீது ஒரு யோகா
நெல்லை:
முட்டைகள் மீது அமர்ந்து யோகாசனம் செய்து 8 சிறுவர், சிறுமியர்கள் சாதனை படைத்தனர்.
தமிழ்நாடு சுவாமி விவேகானந்தர் யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகத்தைச் சேர்ந்த 8 சிறுவர், சிறுமியர்கள் ஒரு மணி நேரத்துக்கு முட்டைகள் மீது அமர்ந்துசாதனை படைத்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவ, மாணவிகள் குறித்த விவரம்:
மோனிகா (6) ராஜாத்தி ஆங்கிலப்பள்ளி
சின்னவேல்ராஜ் (6) கழுகுமலை இந்து வித்யாலயா பள்ளி
சிவப்பிரியா (9) தூத்துக்குடி ஸ்ரீவிவேகானந்தர் பள்ளி
அழகு வள்ளி (10) தூத்துக்குடி ஸ்ரீவிவேகானந்தர் பள்ளி
சோமசுந்தரி (10) ஸ்ரீ இந்து வித்யாலயா பள்ளி
எஸ்.கீர்த்தனா (6) ஸ்ரீ வித்யாலயா பள்ளி
திவ்ய ஜான்சி ராணி (7) குருவிகுளம் பூபதி ஆங்கிலப் பள்ளி
நிஷா (9) தூத்துக்குடி கேவிஎஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி
இவர்கள் 8 பேரும் முட்டைகள் மீது அமர்ந்து பத்மாசனம் செய்து காண்பித்தனர். இவர்களுக்கு யோகா கலைஞர் எஸ்.சுரேஷ்குமார் பயிற்சி அளித்துவருகிறார்.












Click it and Unblock the Notifications