For Daily Alerts
Just In
திருச்சி ஹோட்டலில் வெடிவிபத்து: ஒருவர் பலி
திருச்சி:
திருச்சி மாவட்டம் என்.எஸ்.பி.ரோட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வியாழக்கிழமை அதிகாலை கேஸ் சிலிண்டர் கசிந்து வெடி விபத்து ஏற்பட்டது.இச்சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். 8 பேர் படு காயமடைந்தனர்.
இச்சம்பவம் குறித்துப் போலீஸார் கூறுகையில், காலை வேளை வேலை செய்யும் ஹோட்டல் ஊழியர்கள் கேஸ் சிலிண்டரைப் பற்ற வைத்த போது விபத்துஏற்பட்டதாகத் தெரிவித்தனர்.
வெடி விபத்தில் இறந்தவர் பெயர் தெரியவில்லை. அவரது உடல் பிரதேச பரிசோதனைக்காக கே.ஏ.பி.விஸ்வநாதம் மருத்துவமனையில்வைக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கே.ஏ.பி.விஸ்வநாதம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹோட்டலில் வெடி விபத்தில் ஏற்பட்டதீ பக்கத்து கடைகளுக்கும் பரவியது. இதில் பல பொருட்கள் சேதமடைந்துள்ளன.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, November 30, 2000, 5:30 [IST]