For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உண்மையைச் சொன்னால் அடியா? ஜெ. கேள்வி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஆளும் தி.மு.கவினரின் உதவியோடு தமிழகம் முழுவதும் கள்ளச் சாராய வியாபாரம் கொடி கட்டிப் பறக்கிறது எனமுன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கூறினார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் கள்ளச் சாராயம் ஊற்றெடுத்துள்ளது. இந்தவியாபாரிகளுக்கு திமுகவின் மூத்த தலைவர்கள், பெரும் புள்ளிகளின் ஆதரவு உள்ளது.

தங்களது பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதை வெளியுலகுக்கு எடுத்துச் சொல்லும் பொது மக்களைதிமுகவினர் தாக்குகின்றனர்.

சமீபத்தில் மந்திரி ஆற்காடு வீராசாமி கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் ராஜா என்ற வாலிபர் எழுந்து பேசினார்.தனது வீட்டருகே குண்டர்கள் கள்ளச் சாராயம் காய்ச்சுவதாகக் கூறி உதாரணத்துக்கு ஒரு பாட்டில் கள்ளச்சாராயத்தையும் காட்டினார்.

வீராசாமி உட்கார்ந்திருந்த மேடையிலேயே அந்த பாட்டிலை போய் காட்டினார். இதை பொதுமக்களும் பார்த்தனர்.

இதையடுத்து உண்மையைச் சொன்ன அந்த வாலிபரை போலீசாரே இழுத்துச் சென்று அடித்து உதைத்துள்ளனர்.தான் உண்மையைச் சொன்னதால் போலீசார் தன்னைத் தாக்குவதாக அந்த வாலிபர் மந்திரி வீராசாமியிடம் புகார்கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை.

அந்த வாலிபரின் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதற்கான பொறுப்பை திமுக தலைவரும் முதல்அமைச்சருமான கருணாநிதி தான் ஏற்க வேண்டும்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X