கோப்புகளை பார்க்கத் தொடங்கினார் மாறன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பூரண குணமடைந்து விட்ட மத்திய தொழில்துறை அமைச்சர் மாறன் புதன்கிழமை இரவே அலுவலகக்கோப்புக்களைப் பார்க்கத் தொடங்கி விட்டார் என்று அப்பல்லோ மருத்துவமனை தலைமை டாக்டர் ரெட்டிதெரிவித்தார்.

மாறன் உடல்நிலை குறித்து டாக்டர் ரெட்டி கூறுகையில், மத்திய அமைச்சர் மாறன் முற்றிலும் குணமடைந்துவிட்டார்.

அவர் புதன்கிழமை இரவே மருத்துவமனையில் வைத்து அலுவலகக் கோப்புக்களைப் பார்த்தார். இன்னும் 15லிருந்து 20 நாட்களுக்குள் அவர் அலுவலக வேலைகளை வழக்கம் போல் கவனிப்பார் என்றார்.

மற்றொரு டாக்டர் கோபால் கூறுகையில், அப்பல்லோ மருத்துவ மனையிலிருந்து திரும்பு முன் முரசொலி மாறன்டெல்லியிலுள்ள சில அமைச்சர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தான் நலமாக இருப்பதாக கூறினார்என்றார்.

ஒற்றைத் தலைவலியால் அப்பல்லோவில் அனுமதி:

முன்னதாக, அக்டோபர் 28 ம் தேதி அமைச்சர் மாறன் ஒற்றைத் தலைவலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நவம்பர் 7 ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவர் இருதயக் கோளாரால் பாதிக்கப்பட்டிருந்துபரிசோதனையில் தெரிய வந்தது.

முதல்வர் கருணாநிதி மற்றும் மூத்த அமைச்சர்கள் பலர் மாறனை நேரில் சென்று சந்தித்தனர். முதல்வர் இரவுமுழுவதும் மருத்துவ மனையிலேயே தங்கி மாறனைக் கவனித்துக் கொண்டார்.

செப்டல் அப்லேஷன்:

அப்பல்லோ மருத்துவமனையில் மாறனுக்கு செப்டல் ஆப்லேஷன் முறைப்படி சிகிச்சையளிக்கப்பட்டது. ஜெர்மன்மற்றும் லண்டனிலிருந்து டாக்டர்கள் சென்னைக்கு வந்து மாறனைப் பரிசோதித்தனர். அவர்களும் மாறனுக்குசிகிச்சையளித்தனர். இதற்குப்பின் தற்போது உடல்நிலை நன்கு தேறி விட்டார் மாறன்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+