வீடுகளுக்கு அருகே மதுக்கடை: கொந்தளிப்பில் மக்கள்
சென்னை திருவான்மியூர் பெரியார் நகரில் உள்ள காந்தி தெருவில் மதுபானக்கடை திறப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளனர்.
திருவான்மியூரில் இந்திராநகர் 29-வது குறுக்குத்தெரு அருகே பெரியார் நகர் உள்ளது. இதன் அருகில் வள்ளூவர்நகர், மற்றும்குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இப்பகுதியில் சுமார் 800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தப்பகுதியில் வசிக்கின்றனர்.
பெரியார் நகரில் காந்தி தெரு உள்ளது. இந்த தெருவில் மதுபானக்கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. முழுக்க,முழுக்க குடியிருப்புப் பகுதியான இங்கு மதுபானக்கடை திறப்பு குறித்து மக்களுக்கு தெரியவந்தது.
மதுபானக்கடை திறக்கும் இடத்தின் எதிரில் திருவள்ளூவர் தமிழ்வழி கூடம் என்று ஒரு பள்ளியும், சத்துணவுக்கூடமும் உள்ளன.இப்பகுதியில் மாநகராட்சிப் பள்ளி ஒன்றும் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.இப்பகுதியில் அடிக்கடி சிறிய அளவில் பிரச்சனை ஏற்படுவதும் உண்டு.
இந்நிலையில் இங்கு மதுபானக்கடை திறக்கப்படுகிறது என்கிற செய்தி பரவிய உடன் அங்குள்ள பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் முறையிட்டுள்ளனர். திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் வள்ளூவர் நகர் பொது நலச்சங்கத்தின் தலைவர்கே.எம்.லட்சுமணன் இது குறித்து மனு கொடுத்துள்ளார்.
பெரியார் நகர் பொதுநலச் சங்கத்தின் தலைவர் ஆறுமுகமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
அரசிடமும், போலீஸாரிடம் உரிய முறையில் மனு கொடுத்தும் தங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்று பொதுமக்கள்அதிருப்தியில் உள்ளனர். இவ்வளவு எதிர்ப்பையும் மீறி அங்கு மதுபானக்கடை திறக்கும் நிலை உள்ளதால் நேற்றுஅந்தப்பகுதியில் உள்ள பெண்கள் திரண்டனர்.
சாலை மறியலில் ஈடுபடுவது என்றும் அவர்கள் முடிவெடுத்தனர். குடியிருப்புப் பகுதியான இங்கு மதுபானக்கடையைதிறக்கக்கூடாது என்றும் இதனால் பொது அமைதி கெடும் என்றும் எனவே இந்தப் பிரச்சனையில் முதல்வரே நேரடியாகதலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.












Click it and Unblock the Notifications