அரசுக் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் கல்வி அறிமுகம்
சென்னை:
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வெள்ளிக்கிழமை முதல் கணினிக் கல்விஅறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் அரசு கல்லூரிகள் அனைத்திலும் கணினிக் கல்வியை அறிமுகம்செய்துள்ள முதல் மாநிலமாக தமிழகம் உயர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதுள்ள அரசு மேல் நிலைப் பள்ளிகளில் தமிழக அரசு கணினிக் கல்வியை அறிமுகம் செய்துள்ளது.தனியார் கணினி பயிற்சி மையங்களுடன் இணைந்து கூட்டு முயற்சியாக இந்த திட்டம் செயல் படுத்தப்பட்டுவருகிறது. தற்பொழுது தமிழகம் முழுவதும் உள்ள 60 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கணினிக்கல்வி அறிமுகம் செய்யப்படுகிறது.
இத்திட்டத்தின் துவக்கவிழா சென்னை மாநிலக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை காலை நடந்தது. முதல்வர்கருணாநிதி இத் திட்டத்தை துவக்கி வைத்தார். ஆண்டு தோறும் முப்பதாயிரம் மாணவர்களுக்கு கணினிக் கல்விவழங்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுடன் மூன்று தனியார் கணினி பயிற்சி நிறுவனங்கள் இந்த கூட்டு முயற்சியில் ஈடுபடுகின்றன.என்.ஐ.ஐ.டி நிறுவனம் 48 கல்லூரிகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி வளாகத்திலேயே அறிமுகம் செய்யப்படும் இந்த திட்டத்தில் இந்த ஆண்டு 25 ஆயிரத்து 178 மாணவர்கள்சேர்ந்துள்ளனர். பயிற்சிக் கட்டணமாக தலா இரண்டாயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதனை மாணவ,மாணவியர் நான்கு தவணையாக செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு தமிழக அரசு ஆண்டுக்குஆறு கோடி ரூபாய் வழங்குகின்றது.
இந்த தொகை மாணவர்களிடம் இருந்து கட்டணமாக வசூலிக்கப்படுவதால் அரசுக்கு எந்த நிதிச் சுமையும் இல்லாதவண்ணம் இத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.