அசாம்: உல்பா தீவிரவாதிகள் தாக்குதலில் 14 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கவுஹாத்தி:
அசாம் மாநிலம் பான்கைகான் பகுதியில் உல்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.19 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் வேறு மாநிலத்தவர் என்று தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் அசாமின் மேற்குப் பகுதியான பான்கைகானில் வியாழக்கிழமை நள்ளிரவு நடந்தது.
உல்பா தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அனைவரும் பிகாரைச் சேர்ந்தவர்கள். வியாபாரத்திற்காக அங்கிருந்துஇடம் பெயர்ந்து அசாமுக்கு வந்து வேலை செய்து வருகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. மேலும் இவர்கள்பிகாரிலுள்ள மார்வாரி இனத்தைச் சேர்ந்தவர்கள்.
வங்க தேசத்தில் வசித்து வரும் உல்பா தீவிரவாதிகளின் தலைவர் உத்தரவின்படி, அசாமில் இருக்கும் வேறுமாநிலத்தவரை, உல்பா தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாகப் போலீஸாருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications