உதகையில் 5 சுரங்கத் தொழிலாளர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

உதகமண்டலம்:

பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ் சிங்காரா பகுதியில் சுரங்கத்தில் பணி புரிந்து வந்த 5 பேர் 300 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்து இறந்தனர்.

பைகாரா இறுதி நீர் மின் திட்டப் பணிகள் ரூ 386 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு முடிக்கப்பட வேண்டும் என்பதால்பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன

புதன்கிழமை இரவு கட்டுமானப் பொருட்களை விஞ்ச் மூலம் 600 மீட்டர் உயத்திலிருந்து தாழ்வான பகுதிக்கு 5 பணியாளர்கள் எடுத்து வந்தனர். வலுவானஇரும்பு கயிற்றால் இயக்கப்படும் இந்த விஞ்ச் 300 மீட்டர் உயரம் வந்த போது தீடீரென அறுந்து விழுந்தது.

கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த 5 பேரும் செங்குத்தான குகையிலிருந்து கீழே விழுந்தனர். இவர்கள் குகையின் 4 பகுதிகளில் உள்ள பாறைகளிலும்மோதி உடல் சின்னபின்னமாகி இறந்தனர்.

இந்த விபத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த தஸ்தகரி (19), பீகாரைச் சேர்ந்த லோலன்ராம் (30), உபேந்திரா ராவ் (25), தர்ம விஜி (22), உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராம்ப்ரீத் (20) ஆகியோர் உயிரிழந்தனர் என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விஞ்ச் பாதையில் பணி செய்து கொண்டிருந்த பீகாரைச் சேர்ந்த அனுஜ் குமார்சிங் (26) என்பவர் இரும்புக் கயிறு மோதியதால் காயமடைந்தார். இவர் தனியார்மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+