காட்டில் தற்கொலை செய்ய நினைத்தேன்: ராஜ்குமார்
பெங்களூர்:
வீரப்பன் என்னைப் பிடித்து வைத்திருந்த போது நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன் என்று நடிகர் ராஜ்குமார் அகில இந்தியவானொலி நிலையத்துக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
கடந்த நவம்பர் 16 ம் தேதி வீரப்பன், நடிகர் ராஜ்குமாரை விடுவித்தார். இவர் வியாழக்கிழமை பெங்களூர் வானொலி நிலையத்துக்குப் பேட்டியளித்தார்.
இந்தப் பேட்டி ஆ நூறென்ட்டு தினங்களு என்ற பெயரில் ஒளி பரப்பப்பட்டது. இந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது:
கடந்த ஜூலை 30 ம் தேதி நான் வீரப்பனால் கடத்தப்பட்டேன். வீரப்பன் பிடியில் இருந்த போது நான் மிகவும் தனிமைப் படுத்தப்பட்டதாக உணர்ந்தேன்.அங்கிருந்த உயரமான குன்றுகளிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன்.
யானையைப் பார்க்க ஆசை:
மேலும் நான் காட்டில் யானையைப் பார்க்க விரும்பினேன். ஆனால் வீரப்பனோ அல்லது அவரது கூட்டாளிகளோ எங்களை எந்தப் பக்கமும் விடவில்லை. வீரப்பனிடம் எனது ஆசையைக் கூறியும். அவர் என்னிடம் நான் யானையைப் பார்க்க அனுமதித்தால் அது மிதித்துக் கொல்லும் அபாயம்உள்ளதாகத் தெரிவித்தார்.
அவ்வப்போது என் மனைவி, மகன்கள் ஆகியோர் ரேடியோ மூலம் விடுத்த செய்திகளைக் கேட்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். இந்தமாதிரி சூழ்நிலையை எதிர்கொண்டு, மீண்டு வருவேன் என்று எதிர்பார்க்கவேயில்லை.
மேலும் காட்டில் நான் தனிமைப் படுத்தப்பட்டது போல் உணர்ந்தேன். எனது வேதனைகள், சங்கடங்களை பகிர்ந்து கொள்ள யாரும் இல்லாதது போல்உணர்ந்தேன். மிகவும் அவதிப்பட்டேன்.
குடும்பத்துடன் இணைந்தேன்:
இப்போது நான் என் குடும்பத்துடன் இணைந்து விட்டேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது ரசிகர்கள் நான் திரும்பி வந்து விட்டதுகுறித்து தெரிந்ததும் அதை அவர்கள் தீபாவளி போல் கொண்டாடினர். அது என்னை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்தது என்று தனது பேட்டியில் கூறியிருந்தார்ராஜ்குமார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications