சிரோமணி குருத்வாரா கமிட்டிக்கு புதிய தலைவர்

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்:

இந்திய சீக்கிய ஆலயங்களை நிர்வாகிக்கும் சிரோமனி குருத்வாரா பிரபந்த கமிட்டியின் (எஸ்ஜிபிசி) தலைவராகஜகதேவ் சிங் தால்வாடி

வியாழக்கிழமையன்று ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எஸ்ஜிபிசியின் தலைவராக இருந்த ஜகிர் கவுருக்கு பதிலாக தல்வாடி புதிய தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்டிருக்கிறார். கவுரின் மகள் ஏப்ரல் மாதம்20-ம் தேதி மர்மமான முறையில் இறந்து போனார். இது தொடர்பாக கவுர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டின்காரணமாக அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அகாலிதளம் தலைவரும் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தனது முடிவை எஸ்ஜிபிசியின் உறுப்பினர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். இந்த கூட்டம் அமிர்தசரஸ் பொற்கோவிலில் நடைபெற்றது.

தல்வாடியின் பெயரை அகாலிதளத்தின் ஜோராசிங் மான் முன் மொழிந்தார். அதை பதவியை விட்டு போகும் பொதுச் செயலாளர் ஹர்தல்பிர் சிங் ஷா வழிமொழிந்தார். தல்வாடிக்கு எதிராக வேறு யார் பெயரும் கூறப்படாததால் சீக்கிய மந்திரங்கள் முழங்க தல்வாடி ஒரு மனதாக தலைவராகதேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலைவராக மீண்டும் சிபாரிசு செய்யப்படாத கவுர் பத்திரிக்கையாளர்களிடம் பேச மறுத்து விட்டார். ஆனால் பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில்தான் பதவியில் இருந்த போது தவறுகள் ஏதேனும் செய்திருந்தால் தன்னை மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+