ஜாதிக் கட்சிகளுக்கு இடமில்லை

Subscribe to Oneindia Tamil

கரூர்:

ஜாதிக் கட்சிகளுக்கு இடமில்லை, இக்கட்சிகளுடன் யாரும் கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடாது என பா.ஜ.தலைவர் கிருபாநிதி தெரிவித்தார்.

தாமரை ரத யாத்திரை நடத்திய டாக்டர் கிருபாநிதி, கரூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஜாதிக் கட்சிகளுக்கு யாரும் இடம் அளிக்கக் கூடாது. தமிழகத்தில் ஜாதிக் கட்சிகள் பெருகி வருவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. அவர்களுக்குஎந்தக் கூட்டணியிலும் இடம் தரக் கூடாது. எங்கள் கூட்டணியில் இடம் இல்லை.

மூன்றாவது அணி அமைப்பது குறித்து மூப்பனார் தெளிவான நிலையில் இல்லை. ஒரு நாளைக்கு மூன்றாவது அணி வேண்டும் என்கிறார். இன்னொரு நாள்வேண்டாம் என்கிறார். ஜெயலலிதாவுடன் கூட்டணி உண்டா இல்லையா என்பதிலும் குழப்பமே நீடிக்கிறது. அவரது நிலையைப் புரிந்து கொள்ளமுடியவில்லை.

ஜம் காஷ்மீரில் சண்டை நிறுத்தம் குறித்து சங்கராச் சாரியார் விமர்சனம் செய்துள்ளார். அவர் ஒரு அரசியல்வாதி அல்ல. வாஜ்பாயின் பரந்த மனப்பான்மைஉலகுக்கே தெரியும். மேலும், சண்டை நிறுத்தம் பற்றி இந்திய மக்கள் அனைவரும் அறிவர்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்து தேர்தல் வரும்போது டிவு செய்யப்படும். தமிழகத்தில் ஆட்சி அமைப்பது பா.ஜ.,வின் இலக்கு அல்ல. மக்களே ஆட்சிஅமைக்க அழைக்க வேண்டும்.

எரி பொருள் விலை ஏற்றம் அல்ல. இது மானியக் குறைப்பு மட்டுமே. கடன் வாங்கி மானியமாகக் கொடுப்பதில் பலனில்லை.

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையால், எதிர்காலம் வளமுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதுவரை தமிழக பா.ஜ.வின்தாமரை ரத யாத்திரை 8, 500 கிலோ மீட்டர்களைக் கடந்து விட்டது.

தமிழகக் கோயில் நிர்வாகிகள் தெய்வபக்தி உள்ள சான்றோர்களிடம் அளிக்க வேண்டும். கோயில்களை சரியாக பராமரிக்கப்பட வேண்டும். இது குறித்துமத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவுள்ளோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+