நரக வேதனையை அனுபவித்த நாகப்பா
தார்வார்:
சந்தனக் கடத்தல் வீரப்பன் பிடியில் இருந்த போது நரக வேதனையை அனுபவித்தேன் என்று நாகப்பா கூறினார்.
சந்தன மரக் கடத்தல் வீரப்பன் கடந்த ஜூலை மாதம் 30 ம் தேதி, நடிகர் ராஜ்குமாரைக் கடத்தினார். பின்னர் பல்வேறு இடர்பாடுகளைக் கடந்துஅவர் நவம்பர் மாதம் மீட்கப்பட்டார்.
ஆனால் ராஜ்குமார் மீட்கப்படுவதற்கு முன்பு, வீரப்பனால் கடத்தப்பட்டவர்களில் ஒருவரான நாகப்பா காட்டிலிருந்து தப்பித்து வந்து பெரும் பரபரப்பைஏற்படுத்தினார்.
பின்னர் அவர் வியாழக்கிழமை கர்நாடக ஹைகோர்ட்டில் ஆஜரானார். பின்னர் தன் பெற்றோரைப் பார்ப்பதற்காக கர்நாடக மாநிலம் தார்வார்மாவட்டம் மரதகிக்கு வந்தார்.
அங்கு நிருபர்களிடம் அவர் கூறுகையில், வீரப்பனிடம் நான் பணய கைதியாக இருந்தபோது நரக வேதனை எப்படி இருக்கும் என்பதை அனுபவப் பூர்வமாகஉணர்ந்தேன். எப்போது விடுதலை அடைவோம் என்று காத்திருந்தேன்.
அவ்வளவு சீக்கிரம் விடுதலையடைய முடியாது என்ற தெரிந்தவுடன் அங்கிருந்து நைசாகத் தப்பித்து ஓடி வந்து விட்டேன். இது எனக்கு மறுபிறவி போல்உள்ளது.
இது நாள் வரை நான் வீட்டுக் காவலில் இருந்ததாகச் சொல்வது தவறு. காட்டில் இருந்து வந்த பிறகு உடல் நலம் இல்லாததால் ஓய்வு எடுத்துவந்தேன்.
சந்தன வீரப்பனைப் பிடிக்காமல் விடக் கூடாது. என்ன விலை கொடுத்தாவது அவனுடைய நட வடிக்கைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். வீரப்பனைஉயிரோடு அல்லது சுட்டு வீழ்த்தி அவனைப் பிடிக்க வேண்டும் என்றார் நாகப்பா.