For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அகதிகள் போர்வையில் நுழைந்த விடுதலைப்புலி?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அகதிகள் என்கிற பெயரில் தமிழகத்தில் ஊடுறுவிய புலி ஒருவருக்கு முதுகில் குண்டு காயம் இருக்கலாம் என்று கருதி சிகிச்சைக்காக ராமநாதபுரம்அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் ராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டைக்குப் பயந்து ஏராளமான இலங்கைத்தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வருகின்றனர்.

இப்படி வரும் அகதிகளில் பொரும்பாலோனோர் மர்ம படகுகளில் ஏறி ராமேஸ்வரம் கடற்கரை பகுதிகளில் வந்து கரையிறங்குகின்றனர்.

கடந்த 22-ம் தேதி இலங்கையில் இருந்து 2 படகுகளில் புறப்பட்ட எட்டு பெண்கள் உள்பட 25 அகதிகள் 23-ம் தேதி அதிகாலையில் ராமேஸ்வரம்வந்தனர்.

இவர்கள் ராமேஸ்வரத்தில் போலீஸார் விசாரணைக்கு பின்னர் 25-ம் தேதி மண்டபம் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டு சிறப்பு விசாரணை முகாமில்அடைக்கப்பட்டனர். மத்திய , மாநில புலனாய்வு பிரிவு போலீஸார் இந்த அகதிகளிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் கிளிநொச்சி மாவட்டம் வட்டகச்சியை சேர்ந்த கவுதம சீலன் வயது 27. என்பவர் புலிகள் இயக்கத்தில் பணியாற்றி குண்டடிபட்ட நிலையில் தமிழகம்வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும் அவரது முதுகில் குண்டு உள் புகுந்து இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், மருத்துவ பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.

முதல் கட்ட பரிசோதனை முடிவடைந்த நிலையில் இரண்டாவது கட்ட பரிசோதனை செய்த பின் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குகொண்டு செல்லப்படலாம் என்று தெரிகிறது. மருத்துவமனையில் பாதுகாப்புக்காக போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X