For Daily Alerts
Just In
காஞ்சிபுரத்தில் என்ஜினியரிடம் ரூ 1.18லட்சம் கொள்ளை
காஞ்சிபுரம்:
தமிழ்நாடு மின்வாரியத் துறை என்ஜினியரிடம் ரூ 1.18 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் அவரது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
மின்வாரியத்துறை என்ஜினியரான அவர் ஸ்ரீபெரும்புதூர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளைக்குச் சென்று விட்டு வந்து கொண்டிருந்தார். அவர் மின்வாரியஊழியர்களுக்கான மாத சம்பளத்தை எடுத்துக் கொண்டு வந்தார் என்று கூறப்படுகிறது.
திருநின்றவூர் அருகே வந்த அவர், தனது வாகனத்தை அங்கே நிறுத்தி விட்டு பக்கத்திலுள்ள கடையில் ஸ்டாம்புகள் வாங்கச் சென்றார். அவர் திரும்பி வந்துபார்த்த போது பணம் வைக்கப்பட்டிருந்த அவரது பை காணாமல் போயிருந்தது.
உடனடியாக அவர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். குற்றவாளிகளைப் போலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Tuesday, May 2, 2000, 5:30 [IST]