வீரப்பன்: ஜார்ஜ் கருத்துக்கு கிருஷ்ணா பதில் கூற மறுப்பு
பெங்களூர்:
வீரப்பனைப் பிடிக்க மத்திய அரசு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களை அனுப்பத் தயார் என்று கூறியிருப்பது அதிருப்தி அளிக்கிறது என்று ஜார்ஜ் பெர்னான்டஸ்கூறியது குறித்து கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா பதில் கூற மறுத்து விட்டார்.
வீரப்பன் என்ற தனி மனிதனைப் பிடிப்பதற்காக மத்திய எல்லை பாதுகாப்பு படையினரை அனுப்பத் தயார் என்று மத்திய அரசு கூறியிருப்பது தவறு என்றுமத்திய ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் கூறியதாகப் பத்திரிக்கைகளில் செய்திகள் வந்தது. இது குறித்து கர்நாடகமுதல்வர் கிருஷ்ணாவிடம் கேட்டபோது, நானும் ஜார்ஜ் பெர்னான்டஸ் பேட்டி குறித்துப் படித்தேன்.
அவர் எதற்காக அப்படிக் கூறினார்? எந்த சூழ்நிலையில் அப்படிக் கூறினார்? என்று தெரியவில்லை. இருப்பினும் வீரப்பனைப் பிடிப்பதில் தமிழக, கர்நாடகஅரசுகள் தீவிர ஈடுபாடு காட்டி வருகின்றன. அதிரடிப்படையினரும் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார்கள்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை ஜார்ஜ் பெர்னான்டஸ் நிருபர்களிடம் கூறுகையில் வீரப்பன் என்பவர் தனிமனிதர்.
அவரைப் பிடிப்பது போலீஸாரின் கடமை. அதற்கு மத்திய அரசு எல்லைப் பாதுகாப்புப் படையையோ அல்லது வீரப்பனை ஹெலிக்காப்டர் மூலம் தேட உதவிசெய்யவோ தேவையில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications