இலங்கை அரசு - புலிகள் பேச்சுவார்த்தை தொடங்குமா?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை இனப் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதற்காக நார்வே தூதுக்குழுவினர் முதல் கட்டத் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

அதன்படி, விடுதலைப் புலிகளும், இலங்கை அரசும் விரைவில் சந்தித்துப் பேசவுள்ளனர்.

இலங்கையில் தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே தொடர்ந்து 17 வருடங்களாகப் போர் நடந்துவருகிறது.

இந்தப் பிரச்சனையை விரைவில் சுமூகமாகத் தீர்த்து வைக்கும் முயற்சியில் நார்வே தூதுக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் நான்கு முறைநார்வே தூதுக் குழுவினர் இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

இவர்களது முதல்கட்ட நடவடிக்கைப்படி இரு தரப்பினரும் விரைவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனத் தெரிகிறது.

ஆனால் எப்போது பேச்சுவார்த்தை நடக்கும் என்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை. இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் நடக்கவுள்ளபேச்சுவார்த்தைக்காக புலிகள் தலைவர் பிரபாகரன் எந்த வித முன் நிபந்தனையும் விதிக்கவில்லை.

எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, யாழ்ப்பாணத்தில் உணவு, எரிபொருள், அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை இலங்கை அரசு நீக்கவேண்டும் என நார்வே தூதுக் குழுவினர் இலங்கை அரசிடம் பரிந்துரை செய்துள்ளனர்.

இதற்குப் பதிலாக தாங்கள் கைது செய்துள்ள ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸாரைப் புலிகள் விரைவில் விடுவிப்பார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இரு தரப்பினரும் இதற்கு ஒப்புக்கொண்டால் விரைவில் பேச்சுவார்த்தை நடக்கும் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+