For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவை: சைக்கிள்-லாரி மோதலில் 2 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

கோவை மாவட்டம் அவிநாசி அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் லாரி மோதியது. இதில் இருவர் இறந்தனர்.

கோவை, அவிநாசியில் தியேட்டர் உரிமையாளராக இருந்து வருபவர் கணேசன். இவரது மகன் சீனிவாசன் (23). தியேட்டர் ஆபரேட்டர் லோகநாதன் (37)மற்றும் இவரது நண்பர் பெரியசாமி ஆகிய மூவரும் சாப்பிடுவதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

அப்போது ஒரு லாரி இவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில், மூன்று பேரும் காயமடைந்தனர். இதில் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பெரியசாமிமட்டும் பலத்த காயத்துடன் தப்பினார். அவர் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து அவிநாசிப் போலீசார் வழக்கப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X