நார்வே தூதுக்குழு சமரச முயற்சியில் அர்த்தமில்லை: இலங்கை பிரதமர்
கொழும்பு:
இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு காண நார்வே தூதுக் குழுவினர் சமரச முயற்சி செய்வதில் அர்த்தமில்லை என்று பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமசிங்கேதிங்கள்கிழமை தெரிவித்தார்.
இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண தனி மனிதன் முயற்சித்தாலும் அந்த முயற்சியை நான் முறியடிக்கவோ, அதற்கு எதிராக செயல்படவோமாட்டேன். ஆனால் நார்வே சமரச முயற்சி பயனளிக்குமா என்பது சந்தேகமே என்றார்.
அமைதிப் பேச்சுவார்த்தை:
இலங்கையில் கடந்த 17 ஆண்டுகளாக விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே போர் நடந்து வருகிறது.
இந்தப் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண நார்வே தூதுக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் முதலில் அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெறவேண்டுமானால் யாழ்ப்பாணம் பகுதியில் தாக்குதல் நடத்தி வரும் ராணுவ வீரர்கள் அங்கிருந்து வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஆனால், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயோ, யாழ்ப்பாணம் பகுதியில் இருக்கும் விடுதலைப் புலிகளை ஒருவர் விடாமல் அழித்தொழிக்கும் வரை நாங்கள்போரைக் கைவிட மாட்டோம். அங்கிருந்து ராணுவ வீரர்கள் யாரும் வாபஸ் பெற மாட்டார்கள் என்றார்.
சந்திரிகா அறிவிப்பு:
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு புலிகள் ஒப்புக் கொண்டாலும் யாழப்பாணத்தில் போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.
இதற்கிடையே நார்வே தூதுக் குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம், இலங்கை அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து விடுதலைப் புலிகள்தலைவர் பிரபாகரனை சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications