வீரப்பன்: ஜார்ஜ் கருத்தை எதிர்க்கிறார் சுவாமி
மதுரை:
வீரப்பனைப் பிடிப்பதற்கு எல்லைப் பாதுகாப்புப் படையினரை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டிருப்பது தவறு என்று ஜார்ஜ் பெர்னான்டஸ் கூறியிருப்பதற்குஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
மதுரையில் வியாழக்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெற்றோர் தமிழகத்தில் உள்ளனர். அவர்கள் பல இளைஞர்களைத் தேர்வு செய்து, விடுதலைப் புலிகள்இயக்கத்துக்கு உதவியாக இலங்கைக்கு அனுப்புகின்றனர். இதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காஷ்மீர் போர்நிறுத்தம்:
ரம்ஜான் பண்டிகையையொட்டி காஷ்மீரில் போர்நிறுத்தம் அறிவித்துள்ளார் பிரதமர் வாஜ்பாய். இது வரவேற்கத்தக்கது. காஷ்மீர் பிரச்சனையைத் தீர்த்துவைப்பதற்காக இந்தியா, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
தமிழகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் தலைமையில் மூன்றாவது அணி அமைக்கப்படும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.
வீரப்பன் என்ற தனிமனிதனைப் பிடிக்க எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தேவையில்லை என்று ஜார்ஜ் பெர்னான்டஸ் கூறியிருப்பது தவறு என்றார்சுப்ரமணியம் சுவாமி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications