டிச.6ல் இந்திய தேசிய லீக் போராட்டம்
சென்னை:
பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன் 6-ம் தேதி போராட்டம் நடத்தப் படும் என்றுஅப்துல் லத்தீப் அறிவித்துள்ளார்.
இந்திய தேசிய லீக் கட்சித் தலைவர் எம்.ஏ.லத்தீப் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
1992 - டிசம்பர் ஆறாம் நாள் பாபர் மசூதி உடைத்து தரை மட்டமாக்கப்பட்டது. டிசம்பர் ஆறாம் நாள் கோரிக்கைதினமாகவும், கண்டன நாளாகவும் அனுஷ்டிக்கப்படுகின்றது.
வருகின்ற 6-ம் தேதி காலை பத்து மணிக்கு இந்திய தேசிய லீக் தன்னுடைய ஜனநாயக கடமையை நி றைவேற்றும்வகையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே தொடர் போராட்டம் அமைதியான அறவழியில்தொடங்கும்.
இப் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என இந்திய தேசிய லீக் கேட்டுக் கொள்கிறது. பாபர்மசூதி இடத்தை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பாபர் மசூதியை இடித்து சட்டபூர்வமான ஆட்சிமுறைக்கு ஊனம் ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசமைப்புச் சட்ட அமைப்புகளை தகர்த்து எறியும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும். நாட்டில் நல்லிணக்கம்பல்வேறு சமுதாயங்களுக்கிடையே அணுக்கம் ஏற்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
சாதி வெறி- மத வெறி இல்லாமல் ஆக்கப்பட வேண்டும் என்பன போன்ற கோஷங்களை தான் எழுப்ப வேண்டும்என அனைவரையும் இந்திய தேசிய லீக் அன்புடன் வேண்டிக் கொள்கிறது.
தொடர் முழக்க போராட்டத்தில் தோழமை கட்சித் தலைவர்கள் மூப்பனார், அ.தி.மு.க சார்பில் லியாவூதின் சேட்,சங்கரய்யா, நல்லகண்ணு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டுபேசுகிறார்கள். இவ்வாறு அப்துல் லத்தீப் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications