காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: 6 வீரர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டம் ஆஷிஜிபுரா பகுதியில் லஸ்கர் ஈ.தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்ததீவிரவாதிகள், மத்திய ரிசர்வ் போலீஸ் முகாமுக்குள் புகுந்து சுட்டனர். இதில் 6 வீரர்கள் பலியாயினர்.
தீவிரவாதிகளுக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் இடையே 22 மணிநேரம் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.இன்னும் மோதல் நடந்து வருகிறது.
இச்சம்பவத்தில் 7 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வடக்குக் காஷ்மீர் பகுதியில்வீரர்களின் முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர்?எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications