போர் நிறுத்தத்தால் காஷ்மீரில் குறைகிறது வன்முறை
வாஷிங்க்டன்:
தற்போது காஷ்மீரில் அறிவிக்கப்பட்டுள்ள போர் நிறுத்தத்தால் மிகக் குறைவான வன்முறையே நடந்து கொண்டிருக்கிறது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இதுகுறித்து, அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ரம்ஜானை முன்னிட்டு காஷ்மீரில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால்வன்முறையின் அளவு மிகவும் குறைவாக உள்ளது.
இந்த சந்தர்ப்பத்தை பாகிஸ்தான் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கிளின்டன் அலுவலகச் செய்தி:
காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண, இந்தியா அகில இந்திய ஹூரியத் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால் ஹிஸ்புல் முஜாஹிதின் பாகிஸ்தானையும்சேர்த்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறுகிறது.
பேச்சுவார்த்தை மூலமே காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும். ஆனால் போர்நிறுத்தம் எந்த அளவுக்குப் பயன் தரும் என்று கூற முடியாதுஎன்று கிளின்டன் அலுவலகச் செய்தி தெரிவிக்கிறது.
ஐ.ஏ.என்.எஸ்.