இந்திய பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதலிடம்
லின்கன்:
பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறது.
நியூசிலாந்தில் பெண்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடை பெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் இது வரை நடந்த 3போட்டிகளிலும் இந்தியா வென்று முன்னணி வகிக்கிறது.
முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணியினர் திங்கள் கிழமை இங்கிலாந்து அணியுடன் மோதினர்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை மட்டுமே இந்திய அணியினரால் எடுக்க முடிந்தது.
இந்திய அணியின் சார்பில் சந்திரகாந்தா 45 ரன்களும், மைதிலி 32 ரன்களும், ரூபாஞ்சலி 29 ரன்களும் எடுத்தனர்.
156 ரன்களை இலக்காகக் கொண்டு இங்கிலாந்து அணியினர் களமிறங்கினர். ஆனால் இந்திய அணியினரின் பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல்திணறினர்.
49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை எடுத்து இங்கிலாந்து அணியினர் தோல்வியைத் தழுவினர். இந்திய அணி 8 ரன்கள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவின் ரூபாஞ்சலி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தீபா, சுமிதாவும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
3 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றதால் இந்தியா 6 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியாவும் 6 புள்ளிகள் பெற்றுமுதலிடத்தில் உள்ளது.