மதுராந்தகம்: கார் விபத்தில் எஸ்.பி.படுகாயம்
விழுப்புரம்:
மதுராந்தகம் அருகே கார் - லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு எஸ்.பி பலத்த காயமடைந்தார்.
கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு எஸ்.பி.யாக இருப்பவர் பிரேம்குமார். இவர் செவ்வாய்க்கிழமை காரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.டிரைவர் மாரிமுத்து காரை ஓட்டிவந்தார்.
கார் மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது சென்னையிலிருந்து கேஸ் சிலிண்டர் ஏற்றிக்கொண்டு திண்டிவனம் நோக்கிசென்ற லாரி, கார் மீது மோதியது.
இதில், போலீஸ் எஸ்.பி, பிரேம்குமார் , கார் டிரைவர் மாரிமுத்து ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இருவரும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின் எஸ்.பிரேம் குமார், சென்னையில் தனியார் மருத்துவமனையில்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மதுராந்தகம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications